தங்களது சொத்து பத்திரங்கள் தொலைத்து விட்டதா ! பயம் வேண்டாம் மாற்று நகல் பத்திரங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையான காண்போம்.
வழிமுறை 1
முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று பத்திரம் காணாமல்போய்விட்டது என புகார் ஒன்றினை அளிக்க வேண்டும் . முக்கியமாக அதன் எப்.ஐ.ஆர் நகலினை பெற்றுகொள்ளுங்கள் .
வழிமுறை 2
ஒரு வாரம் கழித்து காவல் நிலையத்தில் உங்களது ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் "non traceable certificate" சான்றிதழினை பெற்றுகொள்ளுங்கள்
வழிமுறை 3
அதன் பிறகு பத்திரிகை"நியூஸ் பேப்பர்" ஒன்றில் பத்திரம் தொலைத்ததை விளம்பரபடுத்திவிட்டு, நீங்கள் அளித்த விளம்பர தூண்டு பகுதியை வெட்டி வைத்துகொள்ளவும்
வழிமுறை 4
இறுதியாக "தொலைந்த பத்திரம் பற்றிய ஆட்சேபம் ஏதுமில்லை" என்று "நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்" இடம் உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வழிமுறை 5
மேலே குறிப்பிட்ட அனைத்து சான்றிதழினை எடுத்துக்கொண்டு தங்களது சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பம் செய்யவேண்டும்
பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தங்களது பத்திரத்தின் நகல் பிரதினை பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment