10ம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு அரசு வழங்கும் கல்வி உதவி தொகை – ரூ.2400 வரை பெறும் வழிமுறை இதோ!|Welfare Card Holders – Complete Guide to Education Assistance for 10th Passed Students|Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, August 3, 2025

10ம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு அரசு வழங்கும் கல்வி உதவி தொகை – ரூ.2400 வரை பெறும் வழிமுறை இதோ!|Welfare Card Holders – Complete Guide to Education Assistance for 10th Passed Students|Tech Info

தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் ,பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை பெறலாம்.

அதாவது தமிழ்நாடு நலவாரிய மையத்திலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்,பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலமாக கல்வி உதவி தொகை வழங்க பட்டு வருகிறது.அந்த கல்வி உதவி தொகை விண்ணப்பத்தினை கீழ் உள்ள லிங்க் இல் download செய்து கொள்ளலாம் .

யார் யார் விண்ணபிக்கலாம்?

  • நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்,பெண் இருபாலரும்.
நலவாரிய மையம் வாரியத்தின்  கீழ் 10ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்:

  • கட்டுமான தொழில் வாரியம்-₹2400
  • கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-₹1000
  • இதர வாரியம்-₹1000
விண்ணப்ப பதிவில் கவனிக்க வேண்டியவை:

  • தமிழில் எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்க்கான வழிமுறைகள்:
  1. விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின்  பெயர் -10வகுப்பு தேர்ச்சி பெற்ற என எழுத வேண்டும்.
  2.  உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர்-நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயரை எழுத வேண்டும்.(உதாரணமாக கட்டுமான தொழில்,சலவை தொழில்) 
  3. .உறுப்பினரின் பெயர் - நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள பெயரை குறிப்பிடவும்.
  4. தந்தை அல்லது கணவன் பெயர்-அட்டை வைத்திருப்பவர்கள் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் பெண்ணாக இருந்தால் கணவனுடைய பெயரையும் நிரப்ப வேண்டும்.
  5. முழு முகவரி - நலவாரிய card இல் இருக்கும் முகவரியை தவறில்லாமல் எழுத வேண்டும்.
  6. பதிவு எண் / நாள் - நலவாரிய அட்டையின்  பதிவு எண்ணையும் சின்ன (/) இட்டுஅட்டை பதிவு செய்த தேதியையும் குறிப்பிடவும்.
  7. குடும்ப அட்டை எண்- தற்போது உள்ள  digital ரேஷன் card இல் கீழ் உள்ள  333 என தொடங்கும் எண்ணை போடவேண்டும் அல்லது www.tnpds.gov.in  இந்த லிங்க் ஐ click செய்து download செய்து அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிடவும்.
  8. ஆதார் எண்- நலவாரிய அட்டையில் பதிவுசெய்துள்ள உறுப்பினரின் ஆதார் எண்ணை குறிப்பிடவும்  குழந்தையின் ஆதார் எண்ணை குறிப்பிட கூடாது.
  9. தொழிலின் தன்மை- வாரியத்தின் பெயரில் எந்த பெயரை குறிப்பிட்டமோ அந்த வாரியத்தின் தொடர்பான தொழிலை போடவேண்டும்.(உதாரணத்துக்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்.தச்சு தொழில்... )
  10. கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்- தங்கள் மகனுக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து மகன் பெயரை குறிப்பட வேண்டும்.இல்லை எனில் மகளுக்காக விண்ணப் பித்தால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை  போட வேண்டும்.
  11. தேர்ச்சிபெற்ற /பயிலும் வகுப்பு/பயின்ற ஆண்டு-தேர்ச்சி  பெற்ற என்பதை டிக் செய்து விட்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என குறிப்பிட வேண்டும் மற்றும் நடப்பு கல்வி ஆண்டு அதாவது 2025-2026 என குறிப்பிட வேண்டும்.
  12. உறுப்பினரின் கையொப்பம் - நலவாரிய அட்டையில்  உறுப்பினர் கையெழுத்து போடப்பட்டிருந்தால்  கையெழுத்து போடவேண்டும் அல்லது கை ரேகை  வைத்திருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
  13. இடம் மற்றும் நாள் - விண்ணப்பம் பதிவு செய்யும் இடம்  மற்றும் அன்றைய தேதியை  குறிப்பிட வேண்டும்.
  14. தொழிற்சங்கதினுடைய கையெழுத்து மற்றும் முத்திரை(seal)- கண்டிப்பாக தேவை.அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு  சென்று வாங்கி கொள்ளவும்.
                                           

                                         DOWNLOAD


  1. தொடர்புக்கு:
  2.       மேலும் தகவல் பற்றி அறிய  அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய  பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர்  விவரங்களை அனுப்பவும்.
  3. இன்னும்  தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும். 
  4. http://bit.ly/3IVWlSV

 


No comments:

Post a Comment