11ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கான கல்வி உதவி – ரூ.1000 முதல் ரூ.3000 வரை பெறும் வழிமுறை இதோ|"₹3000 Education Assistance for Girls Studying in Class 11 – Apply Now with Tamil Nadu Welfare Board!"-Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, August 4, 2025

11ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கான கல்வி உதவி – ரூ.1000 முதல் ரூ.3000 வரை பெறும் வழிமுறை இதோ|"₹3000 Education Assistance for Girls Studying in Class 11 – Apply Now with Tamil Nadu Welfare Board!"-Tech Info

 தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய 11 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு  கல்வி உதவி தொகை  விண்ணபிப்பதன் மூலம் கல்வி உதவி தொகை வழங்கபட்டு வருகிறது.

கல்வி உதவிதொகை விண்ணப்பத்தை எப்படி  பூர்த்தி செய்வது என இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தினை download செய்வதற்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?
  • நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும்.
  • 11ஆம் வகுப்பு பயலும்  பெண் குழந்தைகள் மட்டும் .
நலவாரிய மையம் வாரியத்தின்  கீழ் 10ஆம்  வகுப்பு பயிலும்  மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்:
  • கட்டுமான தொழில் வாரியம்- ரூ3000
  • இதர வாரியம் - ரூ1000
  • கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ 1000
குறிப்புகள்:
  • நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். 
கல்வி உதவி தொகை விண்ணப்பத்தை நிரப்பும் வழிமுறை:
  1. விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவி தொகையின் பெயர்-11ஆம் வகுப்பு பயில என்பதை குறிப்பிடவும்.
  2. விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர்- தங்கள் நலவாரிய அட்டையில்  குறிப்பிடப்பட்டிருக்கும் வாரியத்தின் பெயரை பதிவிட வேண்டும். (உதாரணத்துக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியம்,சலவை தொழிலாளர் நலவாரியம்).
  3. உறுப்பினரின் பெயர்- நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள உறுப்பினரின் பெயரை குறிப்பிட வேண்டும்.
  4. தந்தை மற்றும் கணவர் பெயர்-அட்டை வைத்திருப்பவர்கள் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் பெண்ணாக இருந்தால் கணவனுடைய பெயரையும் நிரப்ப வேண்டும்.
  5. முழு முகவரி - நலவாரிய card இல் இருக்கும் முகவரியை தவறில்லாமல் எழுத வேண்டும்.
  6. பதிவு எண்/நாள் -இதில் நலவாரிய அட்டையில் உள்ள பதிவு எண்ணையும் பக்கத்தில் சின்ன (/ )இட்டு  card பதிவு செய்யப்பட்ட தேதியை நிரப்ப வேண்டும்.
  7. குடும்ப அட்டை எண்-இதில் தற்போதுள்ள digital ரேஷன் cardஇல் உள்ள எண்ணை குறிப்பிட வேண்டும் அதாவது digital நம்பர் ரேஷன் card இல் கீழே உள்ள  333 என தொடங்கும்  நம்பர் ஐ குறிப்பிட வேண்டும்.அல்லது www.tnpds.gov.in  இந்த லிங்க் ஐ click செய்து  download பண்ணி  அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும்.
  8. ஆதார் எண்-இதில் அட்டையில்  பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினரின் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும் .(குழந்தைகளுடைய ஆதார் எண்ணை பதிவிட கூடாது.)
  9. தொழிலின் தன்மை-இதில்  வாரியத்தின் பெயரில் என்ன நிரப்பினமோ அதற்கு சார்பான தொழிலை குறிப்பிட வேண்டும்.(உதாரணத்திற்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சுதொழில்... என குறிப்பிட வேண்டும்.) 
  10. கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்- கல்வி உதவி தொகை பெண் குழந்தைக்கு மட்டும் என்பதால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை எழுத வேண்டும்.
  11. தேர்ச்சிப்பெற்ற/பயிலும் வகுப்பு//பயிலும் வருடம் -இதில் பயிலும் வகுப்பை டிக் செய்து விட்டு விண்ணப்பத்தில் 11 ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆண்டினை குறிப்பிட வேண்டும்.(அதாவது 2025-2026).
  12. பதிவுபெற்ற  உறுப்பினரின் கையொப்பம்-பதிவு செய்தவர் கையெழுத்து போட வேண்டும்.இதில் நலவாரிய அட்டையில் கையெழுத்து போட பட்டிருந்தால் கையெழுத்து போட வேண்டும் இல்லையெனில் கைரேகை வைத்திருந்தால் கைரேகை வைக்க வேண்டும்.
  13. இடம் மற்றும் நாள்- விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி ஐ குறிப்பிட வேண்டும்.
  14.  தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் seal (முத்திரை)  கண்டிப்பாக தேவை.அதற்கு அருகிலுள்ள நலவாரியத்திற்குச் சென்று பெறலாம்.

தொடர்புக்கு:
  1.       மேலும் தகவல் பற்றி அறிய  அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய  பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர்  விவரங்களை அனுப்பவும்.
  2. இன்னும்  தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.
  3. https://bit.ly/40EWDE0


No comments:

Post a Comment