தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு!
தமிழ்நாடு நலவாரியத்தின் மூலம் 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கி வருகிறது.அந்த உதவி தொகையை பெறுவதற்க்கான விண்ணப்ப லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
- நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும்.
- 10ஆம் வகுப்பு பயலும் பெண் குழந்தைகள் மட்டும் .
நலவாரிய மையம் வாரியத்தின் கீழ் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்:
- கட்டுமான தொழில் வாரியம்- ரூ2400
- இதர வாரியம் - ரூ1000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ 1000
- நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
- விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவி தொகையின் பெயர்-10 ஆம் வகுப்பு பயில என்பதை குறிப்பிடவும்.
- விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர்- தங்கள் நலவாரிய அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரியத்தின் பெயரை பதிவிட வேண்டும். (உதாரணத்துக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியம்,சலவை தொழிலாளர் நலவாரியம்).
- உறுப்பினரின் பெயர்- நலவாரிய அட்டையில் பதிவு செய்துள்ள உறுப்பினரின் பெயரை குறிப்பிட வேண்டும்.
- தந்தை மற்றும் கணவர் பெயர்-அட்டை வைத்திருப்பவர்கள் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் பெண்ணாக இருந்தால் கணவனுடைய பெயரையும் நிரப்ப வேண்டும்.
- முழு முகவரி - நலவாரிய card இல் இருக்கும் முகவரியை தவறில்லாமல் எழுத வேண்டும்.
- பதிவு எண்/நாள் -இதில் நலவாரிய அட்டையில் உள்ள பதிவு எண்ணையும் பக்கத்தில் சின்ன (/ )இட்டு card பதிவு செய்யப்பட்ட தேதியை நிரப்ப வேண்டும்.
- குடும்ப அட்டை எண்-இதில் தற்போதுள்ள digital ரேஷன் cardஇல் உள்ள எண்ணை குறிப்பிட வேண்டும் அதாவது digital நம்பர் ரேஷன் card இல் கீழே உள்ள 333 என தொடங்கும் நம்பர் ஐ குறிப்பிட வேண்டும்.அல்லது www.tnpds.gov.in இந்த லிங்க் ஐ click செய்து download பண்ணி அதில் மின்னணு அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும்.
- ஆதார் எண்-இதில் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினரின் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும் .(குழந்தைகளுடைய ஆதார் எண்ணை பதிவிட கூடாது.)
- தொழிலின் தன்மை-இதில் வாரியத்தின் பெயரில் என்ன நிரப்பினமோ அதற்கு சார்பான தொழிலை குறிப்பிட வேண்டும்.(உதாரணத்திற்கு கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சுதொழில்... என குறிப்பிட வேண்டும்.)
- கல்வி உதவிதொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் பெயர்- கல்வி உதவி தொகை பெண் குழந்தைக்கு மட்டும் என்பதால் மகன் ஐ அடித்து விட்டு மகள் பெயரை எழுத வேண்டும்.
- தேர்ச்சிப்பெற்ற/பயிலும் வகுப்பு//பயிலும் வருடம் -இதில் பயிலும் வகுப்பை டிக் செய்து விட்டு விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆணடினை குறிப்பிட வேண்டும்.(அதாவது 2025-2026).
- பதிவுபெற்ற உறுப்பினரின் கையொப்பம்-பதிவு செய்தவர் கையெழுத்து போட வேண்டும்.இதில் நலவாரிய அட்டையில் கையெழுத்து போட பட்டிருந்தால் கையெழுத்து போட வேண்டும் இல்லையெனில் கைரேகை வைத்திருந்தால் கைரேகை வைக்க வேண்டும்.
- இடம் மற்றும் நாள்- விண்ணப்பம் பதிவு செய்யும் இடம் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி ஐ குறிப்பிட வேண்டும்.
- தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் seal (முத்திரை) கண்டிப்பாக தேவை.அதற்கு அருகிலுள்ள நலவாரியத்திற்குச் சென்று பெறலாம்.
DOWNLOAD
தொடர்புக்கு:
- மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நலவாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற whatsapp நம்பர் க்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
- இன்னும் தெளிவாக தகவலை பெற கீழ் உள்ள video ஐ காணவும்.
- http://bit.ly/44TvHmq
No comments:
Post a Comment